என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்ட்: பா.ஜ.க.வின் பீம்லா பிரதான் இந்த ஆண்டின் சிறந்த எம்.எல்.ஏவாக தேர்வு
Byமாலை மலர்20 Nov 2017 10:15 PM GMT (Updated: 20 Nov 2017 10:15 PM GMT)
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் சிறந்த எம்.எல்.ஏ.வாக பா.ஜ.க.வை சேர்ந்த பீம்லா பிரதான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் சிறந்த எம்.எல்.ஏ.வாக பா.ஜ.க.வை சேர்ந்த பீம்லா பிரதான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டசபை நவம்பர் 22-ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் சிறந்த எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுவது வழக்கம்.
இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் சபாநாயகர் தினேஷ் ஓரோன், பாஜக எம் எல் ஏ நிர்பய் சஹாப்தி, ஜெய்பாரத் சமந்தா கட்சி எம் எல் ஏ கீதா கோடா மற்றும் சட்டசபை ஆலோசனை குழு உறுப்பினர் சந்தன் மிஷ்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த எம்.எல்.ஏ.வாக பா.ஜ.க.வை சேர்ந்த பீம்லா பிரதான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேர்வு குழுவினர் கூறுகையில், ஜார்க்கண்ட் சட்டசபை தொடங்கப்பட்ட நவம்பர் 22-ம் தேதி சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான விருது வழங்கப்படும். மேலும், சட்டசபையில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து ஊழியர்களையும் தேர்வு செய்து கவுரவிக்க உள்ளோம் என கூறினர்.
இந்த விருதை பெறும் இரண்டாவது பெண் பீம்லா பிரதான் ஆவார். ஏற்கனவே, கடந்த 2005-ல் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அன்னபூர்ணா தேவி சிறந்த எம் எல் ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் சிறந்த எம்.எல்.ஏ.வாக பா.ஜ.க.வை சேர்ந்த பீம்லா பிரதான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டசபை நவம்பர் 22-ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் சிறந்த எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுவது வழக்கம்.
இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் சபாநாயகர் தினேஷ் ஓரோன், பாஜக எம் எல் ஏ நிர்பய் சஹாப்தி, ஜெய்பாரத் சமந்தா கட்சி எம் எல் ஏ கீதா கோடா மற்றும் சட்டசபை ஆலோசனை குழு உறுப்பினர் சந்தன் மிஷ்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த எம்.எல்.ஏ.வாக பா.ஜ.க.வை சேர்ந்த பீம்லா பிரதான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேர்வு குழுவினர் கூறுகையில், ஜார்க்கண்ட் சட்டசபை தொடங்கப்பட்ட நவம்பர் 22-ம் தேதி சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான விருது வழங்கப்படும். மேலும், சட்டசபையில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து ஊழியர்களையும் தேர்வு செய்து கவுரவிக்க உள்ளோம் என கூறினர்.
இந்த விருதை பெறும் இரண்டாவது பெண் பீம்லா பிரதான் ஆவார். ஏற்கனவே, கடந்த 2005-ல் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அன்னபூர்ணா தேவி சிறந்த எம் எல் ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X