என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லூதியானா ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர்
Byமாலை மலர்18 Nov 2017 10:12 PM GMT (Updated: 18 Nov 2017 10:12 PM GMT)
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் ககன்தீப் காலனியில் வசித்து வந்தவர் ரவீந்தர் (60). ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இவர், தினமும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஷாகா பயிற்சி வகுப்புக்கு செல்வார். கடந்த மாதம் வழக்கம்போல் பயிற்சிக்கு சென்ற இவர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
கங்காதீப் காலனியை நெருங்கியபோது பைக்கில் வந்தவர்கள் திடீரென அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவீந்தர் இறந்து போனார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ரவீந்தர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கைதான அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் ககன்தீப் காலனியில் வசித்து வந்தவர் ரவீந்தர் (60). ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இவர், தினமும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஷாகா பயிற்சி வகுப்புக்கு செல்வார். கடந்த மாதம் வழக்கம்போல் பயிற்சிக்கு சென்ற இவர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
கங்காதீப் காலனியை நெருங்கியபோது பைக்கில் வந்தவர்கள் திடீரென அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவீந்தர் இறந்து போனார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ரவீந்தர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கைதான அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X