என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடிப்படை கழிப்பறை வசதியின்றி வசிப்பவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம்- ஆய்வில் தகவல்
Byமாலை மலர்18 Nov 2017 3:14 PM GMT (Updated: 18 Nov 2017 3:14 PM GMT)
அடிப்படை கழிப்பறை வசதியின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக வாட்டர்எய்டு என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
வாட்டர்எய்டு என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘அவுட் ஆப் ஆர்டர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படை கழிப்பறை வசதியின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் வழியே தீவிர முன்னேற்றம் அடைந்தபொழுதிலும், இந்தியாவில் 73.2 கோடி மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அவர்கள் பொதுவெளி அல்லது பாதுகாப்பற்ற பகுதி அல்லது சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்தும் அச்சம் நிறைந்த சூழலிலேயே உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மேலும் மோசம்.
2017-ம் ஆண்டிற்கான உலக கழிவறைகளின் நிலை பற்றிய அந்த அறிக்கையில், இந்தியாவில் 35.5 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள் கழிவறைக்காக காத்திருக்கின்றனர். அவர்களை ஒரு வரிசையில் நிறுத்தினால் பூமியை நான்கு முறை கயிறால் சுற்றும் அளவிற்கு இந்த எண்ணிக்கை உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவை தொடர்ந்து உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட சீனா இந்த பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளது. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியா 3-வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 3-ல் ஒரு மனிதருக்கு கழிவறை இல்லை. 100 கோடிக்கும் கூடுதலான பெண்கள் மற்றும் சிறுமிகள் இந்த நெருக்கடியில் சிக்குகின்றனர். இதனால் ஆரோக்கிய குறைவு, குறைந்த கல்வியறிவு, சந்தர்ப்பங்களை இழத்தல், கழிவறையின்றி பொது இடத்திற்கு செல்லும்பொழுது தாக்கப்படும் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X