search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
    X

    காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பன்டிப்போரா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பவடக்கில் உள்ள பன்டிப்போரா மாவட்டத்திற்குட்பட்ட சன்டர்கீர் கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அந்த கிராமத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்துக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர்.

    அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

    தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவர்களை சரணடையுமாறு எச்சரித்தனர். எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் 5 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×