என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்குவங்கம்: கத்தை கத்தையாக 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு வைத்திருந்த 3 பேர் கைது
Byமாலை மலர்18 Nov 2017 8:34 AM GMT (Updated: 18 Nov 2017 8:34 AM GMT)
மேற்குவங்க மாநிலத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5,96,000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில் சமீப காலமாக கள்ளநோட்டுக்கள் புழக்கம் அதிகரித்து உள்ளதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. குறிப்பாக புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அதிகளவு மாற்றப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், முர்ஷிதாபாத் நகரில் கள்ளநோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் வைத்திருந்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5,96,000 ரூபாய் கள்ளநோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுவந்த 54 வயதான ஒருவரை டெல்லியில் நேற்று கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 6,60,000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X