என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலைகள் அமைப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: பிரதமர் மோடி உத்தரவு
Byமாலை மலர்17 Nov 2017 10:59 PM GMT (Updated: 17 Nov 2017 10:59 PM GMT)
சாலைகள் அமைக்கிறபோது தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி, சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகள் தொடர்பாக நேற்று ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். அவர், அதிகாரிகளுடன் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்.
அப்போது அவர் கிராமப்புறங்களில் சாலைகளை அமைக்கிறபோது, அவையும், அவற்றின் தரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குகிறபோது, அவற்றில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில், உலக தரத்தை நிதி ஆயோக் அமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
நிலக்கரி துறையை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதி குறைந்துவிட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் நிலக்கரி இறக்குமதிக்கு மாற்று உருவாக்கவும், எரிவாயு தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அளித்த விளக்கத்தில், பல்வேறு பகுதிகளிலும், உள்கட்டமைப்பு துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
சாலை, ரெயில்வே துறை தொடர்பாக பரந்த ஆய்வுக்கு பின்னர், தற்போதைய திட்டங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறை வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டப்பணிகள் நடந்து முடிய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுவரை இல்லாத வகையில், பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் தினந்தோறும் சராசரியாக 130 கி.மீ. தொலைவிலான சாலைகள் அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2016-17 நிதி ஆண்டில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் கூடுதலாக 47 ஆயிரத்து 400 கி.மீ. சாலைகள் சேருகின்றன.
11 ஆயிரத்து 641 குடியிருப்புகளுக்கு சாலை இணைப்புகள் கிடைத்துள்ளன. சாலை இணைப்பு கிடைக்காத குடியிருப்புகளுக்கும் கூடிய விரைவில் அவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதே காலகட்டத்தில் 26 ஆயிரம் கி.மீ. தொலைவில் 4 அல்லது 6 வழி தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.
ரெயில்வே துறையை பொறுத்தமட்டில், மேலே குறிப்பிட்ட காலத்தில் 400 கி.மீ. என்ற இலக்கை கடந்து 953 கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் கி.மீ. தொலைவிலான பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கி.மீ. தொலைவிலான மீட்டர் ரெயில் பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றம் பெற்றுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகள் தொடர்பாக நேற்று ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். அவர், அதிகாரிகளுடன் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்.
அப்போது அவர் கிராமப்புறங்களில் சாலைகளை அமைக்கிறபோது, அவையும், அவற்றின் தரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குகிறபோது, அவற்றில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில், உலக தரத்தை நிதி ஆயோக் அமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
நிலக்கரி துறையை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதி குறைந்துவிட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் நிலக்கரி இறக்குமதிக்கு மாற்று உருவாக்கவும், எரிவாயு தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அளித்த விளக்கத்தில், பல்வேறு பகுதிகளிலும், உள்கட்டமைப்பு துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
சாலை, ரெயில்வே துறை தொடர்பாக பரந்த ஆய்வுக்கு பின்னர், தற்போதைய திட்டங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறை வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டப்பணிகள் நடந்து முடிய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுவரை இல்லாத வகையில், பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் தினந்தோறும் சராசரியாக 130 கி.மீ. தொலைவிலான சாலைகள் அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2016-17 நிதி ஆண்டில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் கூடுதலாக 47 ஆயிரத்து 400 கி.மீ. சாலைகள் சேருகின்றன.
11 ஆயிரத்து 641 குடியிருப்புகளுக்கு சாலை இணைப்புகள் கிடைத்துள்ளன. சாலை இணைப்பு கிடைக்காத குடியிருப்புகளுக்கும் கூடிய விரைவில் அவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதே காலகட்டத்தில் 26 ஆயிரம் கி.மீ. தொலைவில் 4 அல்லது 6 வழி தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.
ரெயில்வே துறையை பொறுத்தமட்டில், மேலே குறிப்பிட்ட காலத்தில் 400 கி.மீ. என்ற இலக்கை கடந்து 953 கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் கி.மீ. தொலைவிலான பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கி.மீ. தொலைவிலான மீட்டர் ரெயில் பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றம் பெற்றுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X