என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா: தனக்குத் தானே சிதை அமைத்து தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி
Byமாலை மலர்16 Nov 2017 12:26 PM GMT (Updated: 16 Nov 2017 12:26 PM GMT)
மகாராஷ்டிராவில் தனது வீட்டில் சிதை மூட்டி தீ வைத்து 90 வயது மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிராவின் மேற்கே கோல்காபூர் மாவட்டத்தில் பாமனி கிராமத்தினை சேர்ந்த 90 வயது முதிர்ந்த பெண் கல்லவ டட்டு காம்பிளே. இவர் வித்தல் என்ற 57 வயது கொண்ட தனது மகன் வீட்டருகே தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13ந் தேதி மாலை காம்பிளேவின் பேத்தி அவருக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டுக்கு தூங்க சென்று விட்டார். அதன்பின்னர் காம்பிளே வீட்டை உள்புறம் பூட்டியுள்ளார். மர குச்சிகள் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவற்றை கொண்டு தனது சிதையை அவர் தயார் செய்துள்ளார்.
தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குச்சியால் கொளுத்தி கொண்டுள்ளார். அடுத்த நாள் காம்பிளேவின் பேத்தி வந்த பொழுது கதவை திறக்க முடியவில்லை. அவரது தந்தை வந்து கதவை உடைத்து உள்ளே சென்றவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த அறையில் சாம்பல் மற்றும் அரைகுறையாக எரிந்த நிலையில் காம்பிளேவின் உடல் இருந்துள்ளது. வாழ்க்கை மீது வெறுப்படைந்து இந்த துயர முடிவை அவர் எடுத்து உள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். தற்செயலான மரணம் என வழக்கு பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் மேற்கே கோல்காபூர் மாவட்டத்தில் பாமனி கிராமத்தினை சேர்ந்த 90 வயது முதிர்ந்த பெண் கல்லவ டட்டு காம்பிளே. இவர் வித்தல் என்ற 57 வயது கொண்ட தனது மகன் வீட்டருகே தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13ந் தேதி மாலை காம்பிளேவின் பேத்தி அவருக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டுக்கு தூங்க சென்று விட்டார். அதன்பின்னர் காம்பிளே வீட்டை உள்புறம் பூட்டியுள்ளார். மர குச்சிகள் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவற்றை கொண்டு தனது சிதையை அவர் தயார் செய்துள்ளார்.
தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குச்சியால் கொளுத்தி கொண்டுள்ளார். அடுத்த நாள் காம்பிளேவின் பேத்தி வந்த பொழுது கதவை திறக்க முடியவில்லை. அவரது தந்தை வந்து கதவை உடைத்து உள்ளே சென்றவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த அறையில் சாம்பல் மற்றும் அரைகுறையாக எரிந்த நிலையில் காம்பிளேவின் உடல் இருந்துள்ளது. வாழ்க்கை மீது வெறுப்படைந்து இந்த துயர முடிவை அவர் எடுத்து உள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். தற்செயலான மரணம் என வழக்கு பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X