என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத ஆதார் கட்டாயம்
Byமாலை மலர்15 Nov 2017 6:49 PM GMT (Updated: 15 Nov 2017 6:49 PM GMT)
உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு கட்டாயம் தங்களுடன் ஆதார் அட்டையை உடன் எடுத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த 2 தேர்வுகளையும் சுமார் 67 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் பள்ளி இறுதி பொதுத் தேர்வின்போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து வரும் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் அட்டையை அந்த மாநில கல்வி வாரியம் கட்டாயமாக்கி உள்ளது.
இதுபற்றி உத்தரபிரதேச கல்வி வாரியமான ‘மத்யமிக் சிக்ஷா பரிஷத்’ நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு கட்டாயம் தங்களுடன் ஆதார் அட்டையை உடன் எடுத்து வரவேண்டும். இல்லையென்றால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். போலியான பதிவு மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை தடுக்கவே ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது’ என கூறப்பட்டு இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த 2 தேர்வுகளையும் சுமார் 67 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் பள்ளி இறுதி பொதுத் தேர்வின்போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து வரும் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் அட்டையை அந்த மாநில கல்வி வாரியம் கட்டாயமாக்கி உள்ளது.
இதுபற்றி உத்தரபிரதேச கல்வி வாரியமான ‘மத்யமிக் சிக்ஷா பரிஷத்’ நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு கட்டாயம் தங்களுடன் ஆதார் அட்டையை உடன் எடுத்து வரவேண்டும். இல்லையென்றால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். போலியான பதிவு மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை தடுக்கவே ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது’ என கூறப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X