search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிப்பூர்: துப்பாக்கிச் சண்டையில் இரு வீரர்கள் பலி - தீவிரவாதி கொல்லப்பட்டான்
    X

    மணிப்பூர்: துப்பாக்கிச் சண்டையில் இரு வீரர்கள் பலி - தீவிரவாதி கொல்லப்பட்டான்

    மணிப்பூர் மாநிலத்தில் இன்று தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள சண்டேல் மாவட்டத்துக்கு உட்பட்ட சாஜிக் மற்றும் சமோல் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு தீவிரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேற்கண்ட பகுதிகளை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இருதரப்பினருக்கும் இடையில் சில மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

    சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் கூடுதலாக வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தொடர்ந்து அப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×