என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 16 குழந்தைகளுக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்
Byமாலை மலர்15 Nov 2017 3:54 AM GMT (Updated: 15 Nov 2017 3:54 AM GMT)
கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 16 குழந்தைகளுக்கு தேசிய விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
புதுடெல்லி:
கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தன்று தேசிய விருதுகளை ஜனாதிபதி வழங்கி வருகிறார். அந்தவகையில் குழந்தைகள் தினமான நேற்று ஜனாதிபதி மாளிகையில் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடந்தது.
தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகாஷ் மனோஜ் புதுமை கண்டுபிடிப்புக்காக தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு தங்கப்பதக்கம், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு, ரூ.10 ஆயிரத்துக்கு புத்தகங்கள் பெற கூப்பன், தேசிய விருது பெற்றதற்கான சான்றிதழ் ஆகியவற்றை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் மனோஜ் மாரடைப்பை முன்கூட்டியே அறியக்கூடிய வகையிலான கருவியை கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய தாத்தா திடீரென மாரடைப்பால் இறந்ததால் ஏற்பட்ட பாதிப்புதான் இந்த கருவியை கண்டுபிடிக்க உதவியதாக ஆகாஷ் மனோஜ் தெரிவித்தார். இந்த கருவி பலருடைய உயிரை காப்பாற்றும் என்றும் அவர் கூறினார்.
கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தன்று தேசிய விருதுகளை ஜனாதிபதி வழங்கி வருகிறார். அந்தவகையில் குழந்தைகள் தினமான நேற்று ஜனாதிபதி மாளிகையில் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடந்தது.
தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகாஷ் மனோஜ் புதுமை கண்டுபிடிப்புக்காக தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு தங்கப்பதக்கம், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு, ரூ.10 ஆயிரத்துக்கு புத்தகங்கள் பெற கூப்பன், தேசிய விருது பெற்றதற்கான சான்றிதழ் ஆகியவற்றை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் மனோஜ் மாரடைப்பை முன்கூட்டியே அறியக்கூடிய வகையிலான கருவியை கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய தாத்தா திடீரென மாரடைப்பால் இறந்ததால் ஏற்பட்ட பாதிப்புதான் இந்த கருவியை கண்டுபிடிக்க உதவியதாக ஆகாஷ் மனோஜ் தெரிவித்தார். இந்த கருவி பலருடைய உயிரை காப்பாற்றும் என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X