என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசியான் மாநாட்டை முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
Byமாலை மலர்14 Nov 2017 9:48 PM GMT (Updated: 14 Nov 2017 9:49 PM GMT)
பிலிப்பைன்சில் நடைபெற்ற இந்தியா - ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.
புதுடெல்லி:
பிலிப்பைன்சில் நடைபெற்ற இந்தியா - ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 25-வது இந்தியா - ஏசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆசிய நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், 12-வது கிழக்கு ஆசிய உச்ச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தனது மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
36 ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்சில் நடைபெற்ற இந்தியா - ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 25-வது இந்தியா - ஏசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆசிய நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், 12-வது கிழக்கு ஆசிய உச்ச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தனது மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
36 ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X