search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - பெண் கைது
    X

    வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - பெண் கைது

    வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண்ணை தெலுங்கானா மாநில போலீசார் இன்று கைது செய்தனர்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ராச்சகொண்டா பகுதியை சேர்ந்தவர் ஷீபா ராணி. அரிசி மற்றும் இறைச்சி ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுவந்த இவர் கடந்த 2008 முதல் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலி விசாக்களை அளித்து, பலரிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மோசடி செய்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குற்றம்சாட்டப்படும் ராணி கடந்த 2006-ம் ஆண்டுவாக்கில் துபாயில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக பல பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்ததால் முன்னர் கைதான விபரம் தெரியவந்தது.

    இதையடுத்து, வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ராணியை ராச்சகொண்டா போலீசார் இன்று மீண்டும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×