என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - பெண் கைது
Byமாலை மலர்14 Nov 2017 12:32 PM GMT (Updated: 14 Nov 2017 12:32 PM GMT)
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண்ணை தெலுங்கானா மாநில போலீசார் இன்று கைது செய்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ராச்சகொண்டா பகுதியை சேர்ந்தவர் ஷீபா ராணி. அரிசி மற்றும் இறைச்சி ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுவந்த இவர் கடந்த 2008 முதல் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலி விசாக்களை அளித்து, பலரிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மோசடி செய்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குற்றம்சாட்டப்படும் ராணி கடந்த 2006-ம் ஆண்டுவாக்கில் துபாயில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக பல பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்ததால் முன்னர் கைதான விபரம் தெரியவந்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ராணியை ராச்சகொண்டா போலீசார் இன்று மீண்டும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ராச்சகொண்டா பகுதியை சேர்ந்தவர் ஷீபா ராணி. அரிசி மற்றும் இறைச்சி ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுவந்த இவர் கடந்த 2008 முதல் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலி விசாக்களை அளித்து, பலரிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மோசடி செய்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குற்றம்சாட்டப்படும் ராணி கடந்த 2006-ம் ஆண்டுவாக்கில் துபாயில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக பல பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்ததால் முன்னர் கைதான விபரம் தெரியவந்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ராணியை ராச்சகொண்டா போலீசார் இன்று மீண்டும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X