என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாவூத் இப்ராகிம் மும்பை சொத்துகள் இன்று ஏலம் விடப்பட்டது
Byமாலை மலர்14 Nov 2017 10:34 AM GMT (Updated: 14 Nov 2017 10:34 AM GMT)
தலைமறைவு தீவிரவாதியும் பிரபல தாதாவுமான தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள மூன்று சொத்துகள் இன்று ரூ.11.58 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
மும்பை:
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் கள்ளக்கடத்தல் வழக்குகளில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள மூன்று சொத்துகளை ஏலம்விட நிதி அமைச்சக அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதையடுத்து, மும்பையில் உள்ள டெல்லி சைக்கா எனப்படும் ரவுனக் அப்ரோஸ் உணவு விடுதி, ஷப்னம் ஓய்வு விடுதி மற்றும் டமார்வாலா கட்டிடத்தில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான ஆறு அறைகள் இன்று ஏலம் விடப்பட்டது.
ரவுனக் அப்ரோஸ் உணவு விடுதி 4.53 கோடி ரூபாய்க்கும், ஷப்னம் ஓய்வு விடுதி ரூ.3.52 கோடி ரூபாய்க்கும், டமார்வாலா கட்டிடத்தில் உள்ள ஆறு அறைகள் 3.53 கோடி ரூபாய்க்கும் ஏலம் போனது. சைபி புர்ஹானி அறக்கட்டளை என்ற நிறுவனம் இந்த மூன்று சொத்துகளையும் ஏலத்தில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் கள்ளக்கடத்தல் வழக்குகளில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள மூன்று சொத்துகளை ஏலம்விட நிதி அமைச்சக அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதையடுத்து, மும்பையில் உள்ள டெல்லி சைக்கா எனப்படும் ரவுனக் அப்ரோஸ் உணவு விடுதி, ஷப்னம் ஓய்வு விடுதி மற்றும் டமார்வாலா கட்டிடத்தில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான ஆறு அறைகள் இன்று ஏலம் விடப்பட்டது.
ரவுனக் அப்ரோஸ் உணவு விடுதி 4.53 கோடி ரூபாய்க்கும், ஷப்னம் ஓய்வு விடுதி ரூ.3.52 கோடி ரூபாய்க்கும், டமார்வாலா கட்டிடத்தில் உள்ள ஆறு அறைகள் 3.53 கோடி ரூபாய்க்கும் ஏலம் போனது. சைபி புர்ஹானி அறக்கட்டளை என்ற நிறுவனம் இந்த மூன்று சொத்துகளையும் ஏலத்தில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X