என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் இன்றும் கடும் பனி மூட்டம்: 69 ரெயில்கள் தாமதம் - 8 ரெயில்கள் ரத்து
Byமாலை மலர்13 Nov 2017 5:12 AM GMT (Updated: 13 Nov 2017 5:12 AM GMT)
டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, இன்று 69 ரெயில்களின் சேவை தாமதம் ஆனது. 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
புதுடெல்லி:
புதுடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை வேளைகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு நிலவியது. டெல்லியில் சனிக்கிழமை நிலவிய கடும் பனி மற்றும் புகை மூட்டம் காரணமாக 64 ரெயில்கள் தாமதமாக சென்றன. 14 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. நேற்று 34 ரெயில்கள் தாமதமாக சென்றன. 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்றும் கடும் பனி மூட்டம் நிலவியது. அருகில் செல்லும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. காலை 8.30 மணிக்கு 400 மீட்டர் தூரம் வரை பார்வை தெரியாத நிலையில் பனி மூட்டம் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்களை மெதுவாக ஓட்டினர்.
டெல்லியில் நிலவும் கடுமையான பனி மூட்டத்தால் ரெயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று 69 ரெயில்கள் தாமதமாக சென்றன. டெல்லி-வாரணாசி மகனாமா எக்ஸ்பிரஸ், டெல்லி- ஆசம்கர் காய்பியத் எக்ஸ்பிரஸ், ஆனந்த் விகார்- மாவு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
புதுடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை வேளைகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு நிலவியது. டெல்லியில் சனிக்கிழமை நிலவிய கடும் பனி மற்றும் புகை மூட்டம் காரணமாக 64 ரெயில்கள் தாமதமாக சென்றன. 14 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. நேற்று 34 ரெயில்கள் தாமதமாக சென்றன. 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்றும் கடும் பனி மூட்டம் நிலவியது. அருகில் செல்லும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. காலை 8.30 மணிக்கு 400 மீட்டர் தூரம் வரை பார்வை தெரியாத நிலையில் பனி மூட்டம் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்களை மெதுவாக ஓட்டினர்.
டெல்லியில் நிலவும் கடுமையான பனி மூட்டத்தால் ரெயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று 69 ரெயில்கள் தாமதமாக சென்றன. டெல்லி-வாரணாசி மகனாமா எக்ஸ்பிரஸ், டெல்லி- ஆசம்கர் காய்பியத் எக்ஸ்பிரஸ், ஆனந்த் விகார்- மாவு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X