என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யோகாவை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்: பாபா ராம்தேவ்
Byமாலை மலர்10 Nov 2017 1:36 PM GMT (Updated: 10 Nov 2017 1:36 PM GMT)
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் யோகா ஆசிரியரை தாக்கியது குறித்து பேசிய பாபா ராம்தேவ், யோகாவை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் யோகா ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஆனால் அவரது வேலைக்கு அப்பகுதி முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதத்திற்கு எதிரான செயலில் ஈடுபட வேண்டாம் என அந்த பெண்மணிக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும் நேற்று அவரது வீட்டில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு பாபா ராம்தேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராஞ்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ் யோகாவை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் தினமும் யோகா பயிற்சிகளை செய்து வருகின்றனர்.
யோகா பயிற்சி செய்வதால் மனநலம் மற்றும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. யோகா பயிற்சியை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X