என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்காடு அருகே மர்மமான முறையில் கிணற்றில் மிதந்த தாய்- மகள் உடல்
Byமாலை மலர்9 Nov 2017 9:41 AM GMT (Updated: 9 Nov 2017 9:41 AM GMT)
பாலக்காடு அருகே மர்மமான முறையில் தாய்- மகள் கிணற்றில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் எப்படி இறந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் கேனன்புள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). விற்பனை வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (37). இவர்களுக்கு அஸ்ரா (17), அட்சயா (15) என்ற மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு சுரேஷ் வேலைக்கு சென்று விட்டார். ஜெயந்தி மகள்களுடன் தூங்கினார். இன்று அதிகாலை சிறுமி அட்சயா எழுந்து பார்த்தபோது தாய் மற்றும் அக்காளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த சிறுமி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். பொது மக்களும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை. இது குறித்து வேலைக்கு சென்ற சுரேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் வந்து தேடினார். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து சித்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சித்திக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய்- மகளை தேடினர்.
அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் 2 பேரும் பிணமாக மிதந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தாய்- மகள் கிணற்றில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் எப்படி இறந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் கேனன்புள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). விற்பனை வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (37). இவர்களுக்கு அஸ்ரா (17), அட்சயா (15) என்ற மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு சுரேஷ் வேலைக்கு சென்று விட்டார். ஜெயந்தி மகள்களுடன் தூங்கினார். இன்று அதிகாலை சிறுமி அட்சயா எழுந்து பார்த்தபோது தாய் மற்றும் அக்காளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த சிறுமி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். பொது மக்களும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை. இது குறித்து வேலைக்கு சென்ற சுரேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் வந்து தேடினார். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து சித்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சித்திக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய்- மகளை தேடினர்.
அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் 2 பேரும் பிணமாக மிதந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தாய்- மகள் கிணற்றில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் எப்படி இறந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X