என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப்: பனிப்புகையினால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் - 3 நாட்கள் பள்ளிகளை மூட அரசு உத்தரவு
Byமாலை மலர்8 Nov 2017 5:38 PM GMT (Updated: 8 Nov 2017 5:39 PM GMT)
பஞ்சாப் மாநிலத்தில் பனிப்புகையினால் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதையடுத்து மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சண்டிகர்:
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது, டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம், காற்று மாசுபாடு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த பனிப்புகையினால் சாலையில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் செல்லும் வாகனங்கள் சரியாக தெரியாததால் விபத்துகள் அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் பனிப்புகையினால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். இன்று பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா - சண்டிகர் நெடுஞ்சாலையில் பள்ளிப்பேருந்து, மினி பேருந்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
இதையடுத்து அம்மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூன்று நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை (9-ம் தேதி) முதல் 11-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கல்வி மந்திரி அருணா சவுத்ரி தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது, டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம், காற்று மாசுபாடு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த பனிப்புகையினால் சாலையில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் செல்லும் வாகனங்கள் சரியாக தெரியாததால் விபத்துகள் அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் பனிப்புகையினால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். இன்று பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா - சண்டிகர் நெடுஞ்சாலையில் பள்ளிப்பேருந்து, மினி பேருந்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
இதையடுத்து அம்மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூன்று நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை (9-ம் தேதி) முதல் 11-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கல்வி மந்திரி அருணா சவுத்ரி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X