என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கராத்தே பயிற்சி அளித்த பெண் மேயர்
Byமாலை மலர்5 Nov 2017 12:22 AM GMT (Updated: 5 Nov 2017 12:22 AM GMT)
கர்நாடக மாநிலம் மங்களூரு நேரு மைதானத்தில் விழா மேடையில் வைத்து மங்களூரு மாநகராட்சி மேயர் கவிதா சனில், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கராத்தே பயிற்சி அளித்தார்.
மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரு நேரு மைதானத்தில் நேற்று தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இந்த போட்டியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கிவைத்தார். அப்போது விழா மேடையில் வைத்து மங்களூரு மாநகராட்சி மேயர் கவிதா சனில், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கராத்தே பயிற்சி அளித்தார். எதிரிகள் தாக்க வந்தால் எப்படி தடுப்பது? பின் எதிர் தாக்குதல் நடத்துவது எப்படி? என்பது பற்றி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு மேயர் கவிதா சனில் கற்றுக்கொடுத்தார்.
சித்தராமையாவும், மேயர் கவிதா சனில் சொல்லி கொடுத்தது போல் பயிற்சி செய்தார். முதல்-மந்திரியும், பெண் மேயரும் விழா மேடையில் கராத்தே பயிற்சி செய்தது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதோடு கராத்தே பயிற்சியின் அவசியத்தையும் எடுத்துரைப்பதாக இருந்தது. மேயர் கவிதா சனில் ஒரு கராத்தே வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X