என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிசை தாக்க முயன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்4 Nov 2017 9:29 AM GMT (Updated: 4 Nov 2017 9:29 AM GMT)
மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீது மைவீசி தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை:
மராட்டிய மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி பகுதியில் உள்ளூர் மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விழாவில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவும் கலந்துகொண்டார். பட்னாவிஸ் உரையாற்றும் போது கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வாலிபர் கோஷங்கள் எழுப்பிக்கொண்டே விழா மேடையை நெருங்க முயன்றார். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பட்னாவிஸ் உடனடியாக அப்பகுதியில் இருந்து கிளம்பினார்.
கைது செய்யப்பட்ட அந்த வாலிபர் கையில் ஒரு நீல மை பாட்டில் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வாலிபர் முதல்வர் மீது அந்த மை பாட்டிலை வீச திட்டமிட்டிருக்கலாம் எனவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X