search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி பலி - 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
    X

    ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி பலி - 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தின் சம்பூரா கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நோக்கி என்கவுண்டர் நடத்தினர். இந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.



    மேலும் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்து தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×