search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வின் மனநிலை மாறாவிட்டால் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி ஆவேசம்
    X

    பா.ஜ.க.வின் மனநிலை மாறாவிட்டால் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி ஆவேசம்

    தலி்த் மக்கள் தொடர்பான பா.ஜ.க.வின் மனநிலை மாறாவிட்டால் டாக்டர் அம்பேத்கரைப்போல் புத்த மதத்துக்கு மாறுவேன் என மாயாவதி பொங்கி எழுந்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல் மந்திரியுமான மாயாவதி பங்கேற்று பேசினார்.

    ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்காக தலித் வேட்பாளரை பா.ஜ.க. முன்னிலைப்படுத்தியதை சுட்டிக்காட்டிய மாயாவதி, ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான பா.ஜ.க.வின் சாதி அரசியலால் ஐதராபாத்தில் தலித் மாணவர் ரோஹித் வேமுலா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும், குஜராத்தில் உள்ள உனா பகுதியில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் குறிப்பிட்டார்.

    இந்து மதத்தில் இதுபோன்ற சாதியம்சார்ந்த வர்ணாசிரம கொள்கைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்படும் கொடுமைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என சங்கராச்சாரியர்களுக்கும், ஜீயர்களுக்கும் டாக்டர் அம்பேத்கர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அந்த வேண்டுகோள்களுக்கு யாரும் செவிசாய்க்காததால் இறப்பதற்கு சிறிதுகாலம் முன்னதாக நாக்பூர் நகரில் கோடிக்கணக்கான ஆதரவாளர்களுடன் டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார்.

    எனவே, தலித்துகள், ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்டோர், மதம் மாறியவர்கள் தொடர்பான சாதியப்போக்கை பா.ஜ.க. மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், டாக்டர் அம்பேத்கரைப்போல் நானும் புத்த மதத்துக்கு மாறுவேன் என்பதை பா.ஜ.க.வுக்கு பகிரங்க சவாலாக தெரிவித்து கொள்கிறேன்.
    Next Story
    ×