என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
Byமாலை மலர்23 Oct 2017 4:02 AM GMT (Updated: 23 Oct 2017 4:02 AM GMT)
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்த நாள் விழாவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:
‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்த நாள் விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. நாட்டின் முதலாவது உள்துறை மந்திரி என்ற பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் “சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்தநாளை நாட்டின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்பு மிகுந்த நாளாக கொண்டாட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.அன்றைய தினம் டெல்லியில், வல்லபாய் பட்டேல் படத்துக்கு மரியாதை செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கலாசார அமைச்சகம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் நாடு முழுவதும் பட்டேலின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ரெயில்வே அமைச்சகம் 100 ரெயில் நிலையங்களில் பட்டேல் தொடர்பான செய்திகளை வெளியிட உள்ளது. மேலும், டெல்லி தேசிய ஸ்டேடியத்தில் விளையாட்டு பிரபலங்கள் பி.வி.சிந்து, மிதாலி ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் 1½ கி.மீ தொடர் ஓட்டம் நடைபெற இருக்கிறது.
‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்த நாள் விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. நாட்டின் முதலாவது உள்துறை மந்திரி என்ற பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் “சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்தநாளை நாட்டின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்பு மிகுந்த நாளாக கொண்டாட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.அன்றைய தினம் டெல்லியில், வல்லபாய் பட்டேல் படத்துக்கு மரியாதை செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கலாசார அமைச்சகம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் நாடு முழுவதும் பட்டேலின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ரெயில்வே அமைச்சகம் 100 ரெயில் நிலையங்களில் பட்டேல் தொடர்பான செய்திகளை வெளியிட உள்ளது. மேலும், டெல்லி தேசிய ஸ்டேடியத்தில் விளையாட்டு பிரபலங்கள் பி.வி.சிந்து, மிதாலி ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் 1½ கி.மீ தொடர் ஓட்டம் நடைபெற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X