என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் ஆளுங்கட்சியில் இருந்து முன்னாள் மகாராஜாவின் பேரன் ராஜினாமா
Byமாலை மலர்22 Oct 2017 10:18 AM GMT (Updated: 22 Oct 2017 10:18 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து முன்னாள் மகாராஜாவின் பேரனும் சட்டசபை மேல்சபை உறுப்பினருமான விக்ரமாதித்யா சிங் ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை முன்னர் ஆண்ட டோக்ரா வம்சாவளியின் கடைசி மன்னர் மகாராஜா ஹரி சிங். இவரது மகன் கரண் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக முன்னர் இருந்தார். கரண் சிங்கின் மகனான விக்ரமாதித்யா சிங், மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த முப்தி முஹம்மது சயீத் தலைமையில் கடந்த 2015-ம் ஆண்டு அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
தற்போது அம்மாநில சட்டசபையில் மேல்சபை உறுப்பினராக பதவி வகிக்கும் விக்ரமாதித்யா சிங், மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி மெஹ்பூபா முப்திக்கு அனுப்பியுள்ளதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை முன்னர் ஆண்ட டோக்ரா வம்சாவளியின் கடைசி மன்னர் மகாராஜா ஹரி சிங். இவரது மகன் கரண் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக முன்னர் இருந்தார். கரண் சிங்கின் மகனான விக்ரமாதித்யா சிங், மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த முப்தி முஹம்மது சயீத் தலைமையில் கடந்த 2015-ம் ஆண்டு அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
தற்போது அம்மாநில சட்டசபையில் மேல்சபை உறுப்பினராக பதவி வகிக்கும் விக்ரமாதித்யா சிங், மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி மெஹ்பூபா முப்திக்கு அனுப்பியுள்ளதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.
மகாராஜா ஹரி சிங்
ரோஹிங்கியா அகதிகள் விவகாரம், மகாராஜா ஹரி சிங்கின் நூறாவது பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை ஆகிய தனது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக விக்ரமாதித்யா சிங் குறிப்பிட்டுள்ளார்.Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X