search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதன்முறையாக நெடுஞ்சாலையில் தரையிறங்கும் 16 விமானப்படை விமானங்கள்
    X

    முதன்முறையாக நெடுஞ்சாலையில் தரையிறங்கும் 16 விமானப்படை விமானங்கள்

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா - லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் வரும் செவ்வாய் அன்று 16 விமானங்களை தரையிறக்கி ஒத்திகை மேற்கொள்ள இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    விமானப்படை விமானங்கள் பொதுவாக விமானப்படை ஓடுதளங்களில் மட்டுமே தரையிறக்கப்படும். போர், இயற்கை பேரழிவு போன்ற அவசரகாலங்களில் மட்டும் வேறு இடங்களில் தரையிரக்க அனுமதிக்கப்படும்.

    இந்நிலையில், இந்திய விமானப்படையை சேர்ந்த 16 விமானங்களை ஒரே நேரத்தில் லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் வரும் செவ்வாய் அன்று தரையிறங்க உள்ளன. ஒரு போக்குவரத்து விமானமும், 15 போர் விமானங்களும் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு ஏ.என்.-32 ரக போக்குவரத்து விமானம், 6 எஸ்.யூ.-30 ரக விமானங்கள், 3 ஜாக்குவார் ரக விமானங்கள் மற்றும் ஆறு மிராஜ் 2000 ரக விமானங்களும் அடங்கும்.



    இந்த நிகழ்வின்போது முதலில் சி-130 ரக விமானத்தில் விமானப்படை கமாண்டோக்கள் எதிரிகளின் எல்லைக்குள் தரையிறங்கி தாக்குதல் நடத்துவது போல் ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மற்ற விமானங்கள் தரையிறங்கி, பின்னர் வானில் பறக்கும், இறுதியாக முதலில் தரையிரங்கிய கமாண்டோ விமானம் மறுபடி வானில் பறந்ததுடன் இந்த ஒத்திகை நிறைவுபெறும் என மத்திய பாதுகாப்புப்படை அதிகாரி கார்கி மாலிக் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் டெல்லி அருகே உள்ள யமுனா நெடுஞ்சாலையில் மிராஜ் 2000 ரக போர் விமானம் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலை தொடங்கப்பட்டபோது அதில் ஆறு போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×