என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திப்புசுல்தான் பிறந்தநாள் விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம்: மத்திய மந்திரி கடிதத்தால் சர்ச்சை
Byமாலை மலர்21 Oct 2017 11:22 PM GMT (Updated: 21 Oct 2017 11:22 PM GMT)
திப்புசுல்தான் பிறந்தநாள் விழா தொடர்பான அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்:
திப்புசுல்தான் பிறந்தநாள் விழா தொடர்பான அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தென்னிந்தியாவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியவர் திப்புசுல்தான். இவரது பிறந்ததினமான நவம்பர் 10-ம் தேதியை ஆண்டுதோறும் கர்நாடக அரசு திப்பு ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகிறது.
அரசு சார்பில் திப்புசுல்தான் பிறந்ததின விழாவைக் கொண்டாடக் கூடாது என பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் கர்நாடக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழாவை கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள திப்புசுல்தான் பிறந்ததின விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நவம்பர் 10-ம் தேதி நடக்க இருக்கும் திப்புசுல்தான் பிறந்ததினம் தொடர்பான விழாவிற்கு என்னை அழைக்க வேண்டாம். மேலும், விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம், திப்புசுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர் என குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் இந்த கடிதம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திப்புசுல்தான் பிறந்தநாள் விழா தொடர்பான அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தென்னிந்தியாவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியவர் திப்புசுல்தான். இவரது பிறந்ததினமான நவம்பர் 10-ம் தேதியை ஆண்டுதோறும் கர்நாடக அரசு திப்பு ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகிறது.
அரசு சார்பில் திப்புசுல்தான் பிறந்ததின விழாவைக் கொண்டாடக் கூடாது என பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் கர்நாடக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழாவை கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள திப்புசுல்தான் பிறந்ததின விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நவம்பர் 10-ம் தேதி நடக்க இருக்கும் திப்புசுல்தான் பிறந்ததினம் தொடர்பான விழாவிற்கு என்னை அழைக்க வேண்டாம். மேலும், விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம், திப்புசுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர் என குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் இந்த கடிதம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X