என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுஷ்மா சுவராஜுடன் பாகிஸ்தான் புதிய தூதர் சந்திப்பு
Byமாலை மலர்21 Oct 2017 10:37 PM GMT (Updated: 21 Oct 2017 10:37 PM GMT)
டெல்லியில் பாகிஸ்தானின் புதிய தூதராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட சோகைல் மெகமூத் முதன் முதலாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
கடந்த 2014-ம் அண்டு முதல் இந்தியாவில் பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வந்த அப்துல் பாசித்தின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதராக சோகைல் மெகமூத்தை அந்த நாட்டு அரசு நியமித்தது. அவர் கடந்த மாதம் டெல்லியில் பாகிஸ்தானின் புதிய தூதராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
சோகைல் மெகமூத் முதன் முதலாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், புதிதாக நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதர்கள் மரியாதை நிமித்தமாக இதுபோன்று சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், குறிப்பிட்டு சொல்லும்படி அவர்கள் பேச்சுவார்த்தையில் எந்த முக்கிய பிரச்சினையும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தன.
சுஷ்மா சுவராஜுடன் நடந்த பாகிஸ்தான் தூதரின் சந்திப்பு சுமுகமாகவும், ஆக்கபூர்வமாக அமைந்து இருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
கடந்த 2014-ம் அண்டு முதல் இந்தியாவில் பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வந்த அப்துல் பாசித்தின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதராக சோகைல் மெகமூத்தை அந்த நாட்டு அரசு நியமித்தது. அவர் கடந்த மாதம் டெல்லியில் பாகிஸ்தானின் புதிய தூதராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
சோகைல் மெகமூத் முதன் முதலாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், புதிதாக நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதர்கள் மரியாதை நிமித்தமாக இதுபோன்று சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், குறிப்பிட்டு சொல்லும்படி அவர்கள் பேச்சுவார்த்தையில் எந்த முக்கிய பிரச்சினையும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தன.
சுஷ்மா சுவராஜுடன் நடந்த பாகிஸ்தான் தூதரின் சந்திப்பு சுமுகமாகவும், ஆக்கபூர்வமாக அமைந்து இருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X