என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: எல்லையோர கிராமங்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு - குழந்தை உள்பட 8 பேர் காயம்
Byமாலை மலர்18 Oct 2017 10:26 AM GMT (Updated: 18 Oct 2017 10:26 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோட்டின் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியின் மீது துபாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோட்டின் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியின் மீது துபாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைகோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீதும், இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் எல்லையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளின்மீது இன்று காலை 7.45 மணியில் இருந்து துப்பாகிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உள்பட 3 பேரும் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் படைகள் மீது இந்திய வீரர்கள் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோட்டின் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியின் மீது துபாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைகோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீதும், இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் எல்லையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளின்மீது இன்று காலை 7.45 மணியில் இருந்து துப்பாகிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உள்பட 3 பேரும் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் படைகள் மீது இந்திய வீரர்கள் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X