search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
    X

    ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

    ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் சேதமடைந்தன. 



    ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தின் மஞ்கோட் செக்டார் பகுதியிலும் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் நிலைகள் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தினர். 

    பாகிஸ்தான் படையினரின் தாக்குதலையடுத்து இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லையை தாண்டி தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×