என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குர்தாஸ்பூர் லோக்சபை இடைத்தேர்தல்: காங். வேட்பாளர் ஜாஹர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
Byமாலை மலர்15 Oct 2017 7:55 AM GMT (Updated: 15 Oct 2017 7:55 AM GMT)
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.
முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 14 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்ற அவர் எல்லா சுற்று எண்ணிக்கையிலும் முன்னிலை வகித்தார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சலேரியா இரண்டாவது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் தொடர்ந்தனர்.
இறுதி முடிவுகளில் சுனில் ஜாஹர் 1,92,219 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சலேரியாவை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் பா.ஜ.க வசம் இருந்த இந்த தொகுதி காங்கிரசுக்கு மாறியுள்ளது. இந்த வெற்றிக்கு அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் காரணம் என சுனில் ஜாஹர் தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றுள்ள சுனிலுக்கு அம்ரீந்தர் சிங், நவ்ஜோத்சிங் சித்து உள்ளிடோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.
முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 14 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்ற அவர் எல்லா சுற்று எண்ணிக்கையிலும் முன்னிலை வகித்தார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சலேரியா இரண்டாவது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் தொடர்ந்தனர்.
இறுதி முடிவுகளில் சுனில் ஜாஹர் 1,92,219 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சலேரியாவை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் பா.ஜ.க வசம் இருந்த இந்த தொகுதி காங்கிரசுக்கு மாறியுள்ளது. இந்த வெற்றிக்கு அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் காரணம் என சுனில் ஜாஹர் தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றுள்ள சுனிலுக்கு அம்ரீந்தர் சிங், நவ்ஜோத்சிங் சித்து உள்ளிடோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X