என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் கணவனை மிரட்ட குழந்தையை கடத்திய பெண்: குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸ்
Byமாலை மலர்13 Oct 2017 3:16 PM GMT (Updated: 13 Oct 2017 3:27 PM GMT)
கர்நாடக மாநிலத்தில் தனது முதல் கணவனை மிரட்டி பணம் பறிப்பதற்காக குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பாகலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுமிக்க பெண் தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். தனது முதல் கணவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக கடந்த 6-ம் தேதி குழந்தை ஒன்றை கடத்தியுள்ளார்.
இதற்காக ஒரு மூன்று பேர் கொண்ட கும்பலிடம் ரூ.15 ஆயிரம் கொடுத்து அந்த குழந்தையை கடத்தி கொண்டு வந்து, தனது முதல் கணவரிடம் அவருக்கு பிறந்த குழந்தை என கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதற்கிடையே, காணமல் போன குழந்தை குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் கடத்தல் கும்பலில் உள்ள இருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இன்று மித்திங்ஹல்லி காவல் நிலையம் அருகே மூன்றாவது நபரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது, அவர் போலீசின் பிடியில் இருந்து தப்பி ஒடியுள்ளார். இதனையடுத்து, போலீசார் அவரது காலை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலால் தப்பி ஓட முடியாமல் கடத்தல் ஆசாமி போலீசாரின் வலையில் மாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பாகலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுமிக்க பெண் தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். தனது முதல் கணவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக கடந்த 6-ம் தேதி குழந்தை ஒன்றை கடத்தியுள்ளார்.
இதற்காக ஒரு மூன்று பேர் கொண்ட கும்பலிடம் ரூ.15 ஆயிரம் கொடுத்து அந்த குழந்தையை கடத்தி கொண்டு வந்து, தனது முதல் கணவரிடம் அவருக்கு பிறந்த குழந்தை என கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதற்கிடையே, காணமல் போன குழந்தை குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் கடத்தல் கும்பலில் உள்ள இருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இன்று மித்திங்ஹல்லி காவல் நிலையம் அருகே மூன்றாவது நபரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது, அவர் போலீசின் பிடியில் இருந்து தப்பி ஒடியுள்ளார். இதனையடுத்து, போலீசார் அவரது காலை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலால் தப்பி ஓட முடியாமல் கடத்தல் ஆசாமி போலீசாரின் வலையில் மாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X