என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி கோவிலில் மின்கசிவால் ஸ்கேன் கருவிகள் பழுது: 6 பக்தர்கள் காயம்
Byமாலை மலர்13 Oct 2017 3:02 AM GMT (Updated: 13 Oct 2017 3:02 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் ஸ்கேன் கருவிகள் பழுதாகின. அப்போது 6 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள், திவ்ய தரிசன பக்தர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்கள் ஆகியோர் தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.
பிரதான நுழைவு வாயில் அருகில் உள்ள ஸ்கேன் மையத்தில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்புப்படை போலீசாரும், தேவஸ்தான பாதுகாப்புப்படை ஊழியர்களும் சோதனைச் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஸ்கேன் கருவிகளுக்கு கீழே இருந்து திடீரென வயர் கருகி துர்நாற்றத்துடன் கூடிய புகை வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து ஓட முயன்றனர்.
உடனே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பக்தர்களை அமைதிப்படுத்தி சிறிது நேரம் தரிசன வரிசையிலேயே தங்க வைத்தனர். இந்த மின்கசிவால் 6 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களின் பெயர் விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
ஸ்கேன் கருவிகள் பழுதடைந்து விட்டதாக தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தேவஸ்தான மின்துறை, பாதுகாப்புத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து பழுதான ஸ்கேன் கருவிகளை சரி செய்ய முயன்றனர். எனினும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து தரிசன வரிசையில் தங்க வைக்கப்பட்ட அனைத்து பக்தர்களையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்யாமலேயே சாமி தரிசனத்துக்காக கோவிலுக்குள் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து பழுதான ஸ்கேன் கருவி மையத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு விரைந்து வந்து, அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்கேன் கருவிகள் எப்படி பழுதானது? என்ற விவரத்தை கேட்டறிந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள், திவ்ய தரிசன பக்தர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்கள் ஆகியோர் தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.
பிரதான நுழைவு வாயில் அருகில் உள்ள ஸ்கேன் மையத்தில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்புப்படை போலீசாரும், தேவஸ்தான பாதுகாப்புப்படை ஊழியர்களும் சோதனைச் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஸ்கேன் கருவிகளுக்கு கீழே இருந்து திடீரென வயர் கருகி துர்நாற்றத்துடன் கூடிய புகை வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து ஓட முயன்றனர்.
உடனே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பக்தர்களை அமைதிப்படுத்தி சிறிது நேரம் தரிசன வரிசையிலேயே தங்க வைத்தனர். இந்த மின்கசிவால் 6 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களின் பெயர் விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
ஸ்கேன் கருவிகள் பழுதடைந்து விட்டதாக தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தேவஸ்தான மின்துறை, பாதுகாப்புத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து பழுதான ஸ்கேன் கருவிகளை சரி செய்ய முயன்றனர். எனினும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து தரிசன வரிசையில் தங்க வைக்கப்பட்ட அனைத்து பக்தர்களையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்யாமலேயே சாமி தரிசனத்துக்காக கோவிலுக்குள் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து பழுதான ஸ்கேன் கருவி மையத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு விரைந்து வந்து, அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்கேன் கருவிகள் எப்படி பழுதானது? என்ற விவரத்தை கேட்டறிந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X