search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தியை காங். தலைவராக்க வேண்டும் என மேலும் 2 மாநில கமிட்டி தீர்மானம்
    X

    ராகுல் காந்தியை காங். தலைவராக்க வேண்டும் என மேலும் 2 மாநில கமிட்டி தீர்மானம்

    தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக உள்ள ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநில கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக ராகுல் காந்தியும் பொறுப்பு வகிக்கின்றனர். சோனியா காந்தி உடல்நலம் குன்றி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதனால், தலைவர் பொறுப்பை ராகுல் காந்திக்கு வழங்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று கூடிய மேற்கண்ட இருமாநில கட்சியின் கூட்டங்களில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில், காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் மாநில கமிட்டியும் இதே தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

    மேற்கண்ட தீர்மானங்களில் மாநில காங்கிரஸ் தலைவரை நியமனம் செய்யும் அதிகாரம் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×