என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோசமான வானிலை காரணமாக நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம் ரத்து
Byமாலை மலர்8 Oct 2017 3:03 AM GMT (Updated: 8 Oct 2017 3:03 AM GMT)
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைப்பகுதியான நாது லாவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
காங்டோக்:
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைப்பகுதியான நாது லாவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
பாதுகாப்பு துறை மந்திரியாக சமீபத்தில் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் எல்லையோர பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிப்பது குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி, சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் சென்ற அவர் ராணுவ உயரதிகாரிகள், அம்மாநில முதல்வர் மற்றும் கவர்னருடன் ஆலோசனைகள் நடத்தினார். மேலும், சியாச்சின் உச்சியில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள வீரர்களிடம் கலந்துரையாடினார்.
இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா பகுதிக்கு நிர்மலா சீதாராமன் நேற்று பயணம் மேற்கொண்டார். சீன எல்லைக்கு மிக அருகில் இருக்கும் இப்பகுதிக்கு முதன் முறையாக அவர் வருகை தந்துள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ - திபெத் எல்லைப்பாதுகாப்பு படை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, அங்குள்ள வீரர்களிடையே அவர் கலந்துரையாடினார். டோக்லாம் பகுதிக்கு நிர்மலா சீதாராமன் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் சிக்கிம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைப்பகுதியான நாது லாவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
பாதுகாப்பு துறை மந்திரியாக சமீபத்தில் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் எல்லையோர பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிப்பது குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி, சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் சென்ற அவர் ராணுவ உயரதிகாரிகள், அம்மாநில முதல்வர் மற்றும் கவர்னருடன் ஆலோசனைகள் நடத்தினார். மேலும், சியாச்சின் உச்சியில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள வீரர்களிடம் கலந்துரையாடினார்.
இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா பகுதிக்கு நிர்மலா சீதாராமன் நேற்று பயணம் மேற்கொண்டார். சீன எல்லைக்கு மிக அருகில் இருக்கும் இப்பகுதிக்கு முதன் முறையாக அவர் வருகை தந்துள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ - திபெத் எல்லைப்பாதுகாப்பு படை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, அங்குள்ள வீரர்களிடையே அவர் கலந்துரையாடினார். டோக்லாம் பகுதிக்கு நிர்மலா சீதாராமன் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் சிக்கிம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X