என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா - சீனா எல்லைப்பகுதியை வான்வழியாக பார்வையிட்ட நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்7 Oct 2017 11:46 AM GMT (Updated: 7 Oct 2017 11:46 AM GMT)
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்தியா - சீனா எல்லைப்பகுதியை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வான்வழியாக சென்று பார்வையிட்டார்.
கங்டாக்:
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்தியா - சீனா எல்லைப்பகுதியை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வான்வழியாக சென்று பார்வையிட்டார்.
புதிய ராணுவ மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர், தற்போது அருணாசலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
அவ்வகையில், இன்று பிற்பகல் சிக்கிம் மாநிலத்தில் சர்ச்சைக்குரிய இந்தியா - சீனா எல்லையோரப் பகுதியான டோக்லாம் - நாதுலா பகுதியை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டார். சிக்கிம் மாநில கவர்னர் ஸ்ரீனிவாஸ் பட்டில், முதல் மந்திரி பவன் சாம்லிங் ஆகியோரை இன்று மாலை சந்திக்கும் ராணுவ மந்திரி, அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்தியா - சீனா எல்லைப்பகுதியை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வான்வழியாக சென்று பார்வையிட்டார்.
புதிய ராணுவ மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர், தற்போது அருணாசலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
அவ்வகையில், இன்று பிற்பகல் சிக்கிம் மாநிலத்தில் சர்ச்சைக்குரிய இந்தியா - சீனா எல்லையோரப் பகுதியான டோக்லாம் - நாதுலா பகுதியை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டார். சிக்கிம் மாநில கவர்னர் ஸ்ரீனிவாஸ் பட்டில், முதல் மந்திரி பவன் சாம்லிங் ஆகியோரை இன்று மாலை சந்திக்கும் ராணுவ மந்திரி, அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X