search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் நகை வாங்க பான்கார்டு அவசியமில்லை
    X

    ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் நகை வாங்க பான்கார்டு அவசியமில்லை

    ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் நகை வாங்குவதற்கு பான்கார்டு அவசியமில்லை என ஜி.எஸ்.டி., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி: 

    கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மத்திய நிதி மந்திரி தலைமையில் மாநில நிதி மந்திரிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், நகை வாங்குபவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் நகை வாங்குபவர்களுக்கு பான்கார்டு அவசியம் இல்லை எனவும் அவர்களின் விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை ரிட்டன் தாக்கல் செய்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×