என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலாவுக்கு நாளை பரோல் உறுதியாக கிடைக்கும்: புகழேந்தி தகவல்
Byமாலை மலர்5 Oct 2017 6:20 PM GMT (Updated: 5 Oct 2017 6:20 PM GMT)
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைப்பதில் பிரச்சனை எதுவும் இல்லை என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைப்பதில் பிரச்சனை எதுவும் இல்லை என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏற்கனவே, பரோல் கேட்டு சசிகலா தரப்பு அளித்த விண்ணப்பத்தை சிறை நிர்வாகம் நிராகரித்தது.
விண்ணப்பம் சரியான முறையில் நிரப்பப்பட்டு அளிக்கப்படவில்லை என அம்மாநில சிறைத்துறை கூறியது. இதனையடுத்து, மீண்டும் புதிய விண்ணப்பம் சசிகலா சார்பில் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலாவுக்கு நாளை உறுதியாக பரோல் கிடைக்கும் என தினகரன் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
பரோல் கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், இன்று விடுமுறை என்பதால் விண்ணப்பம் நாளை பரிசீலிக்கப்பட்டு பரோல் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைப்பதில் பிரச்சனை எதுவும் இல்லை என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏற்கனவே, பரோல் கேட்டு சசிகலா தரப்பு அளித்த விண்ணப்பத்தை சிறை நிர்வாகம் நிராகரித்தது.
விண்ணப்பம் சரியான முறையில் நிரப்பப்பட்டு அளிக்கப்படவில்லை என அம்மாநில சிறைத்துறை கூறியது. இதனையடுத்து, மீண்டும் புதிய விண்ணப்பம் சசிகலா சார்பில் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலாவுக்கு நாளை உறுதியாக பரோல் கிடைக்கும் என தினகரன் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
பரோல் கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், இன்று விடுமுறை என்பதால் விண்ணப்பம் நாளை பரிசீலிக்கப்பட்டு பரோல் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X