என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன எல்லையில் படைவீரர்களுடன் தசரா கொண்டாடிய ராஜ்நாத்சிங்
Byமாலை மலர்30 Sep 2017 3:41 PM GMT (Updated: 30 Sep 2017 3:41 PM GMT)
சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தசரா பண்டிகையை கொண்டாடினார்.
புதுடெல்லி:
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தின் மூன்றாம் நாளில் இந்தியா-சீனா எல்லையான ரிம்கிம், ஜோஷிமத் மற்றும் சாமோலி மாவட்டத்தின் அவுலி பகுதிகளுக்கு சென்றார்.
ரிம்கிம் பகுதியில் அமைந்துள்ள இந்தோ திபெத் எல்லை போலீசார் முகாமுக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு வீரர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கு நடைபெற்ற தசரா வழிபாட்டில் பங்கேற்ற அவர், வீரர்களுக்கு தசரா வாழ்த்துக்கள தெரிவித்தார். அப்போது அவருடன் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத்தும் சென்றார்.
எல்லையில் போராடும் வீரர்களின் துணிச்சலை பாராட்டிய ராஜ்நாத் சிங், வீரர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனியில் சென்று வரும் வகையில் பனி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள், பனியை தாங்கும் வகையிலான ஆடைகள், தொடர்பு கொள்வதற்கு ஏற்ற வகையில் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோஷிமத்தில் படைவீரர்கள் நடத்திய ரத்ததான முகாமையும் பார்வையிட்டார்.
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தின் மூன்றாம் நாளில் இந்தியா-சீனா எல்லையான ரிம்கிம், ஜோஷிமத் மற்றும் சாமோலி மாவட்டத்தின் அவுலி பகுதிகளுக்கு சென்றார்.
ரிம்கிம் பகுதியில் அமைந்துள்ள இந்தோ திபெத் எல்லை போலீசார் முகாமுக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு வீரர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கு நடைபெற்ற தசரா வழிபாட்டில் பங்கேற்ற அவர், வீரர்களுக்கு தசரா வாழ்த்துக்கள தெரிவித்தார். அப்போது அவருடன் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத்தும் சென்றார்.
எல்லையில் போராடும் வீரர்களின் துணிச்சலை பாராட்டிய ராஜ்நாத் சிங், வீரர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனியில் சென்று வரும் வகையில் பனி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள், பனியை தாங்கும் வகையிலான ஆடைகள், தொடர்பு கொள்வதற்கு ஏற்ற வகையில் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோஷிமத்தில் படைவீரர்கள் நடத்திய ரத்ததான முகாமையும் பார்வையிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X