search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளம்: கோர்ட் வளாகத்தில் உள்ள கருவூலத்தில் ரூ.1.20 கோடி கொள்ளை
    X

    மேற்கு வங்காளம்: கோர்ட் வளாகத்தில் உள்ள கருவூலத்தில் ரூ.1.20 கோடி கொள்ளை

    மேற்கு வங்காளம் மாநிலம், பர்த்வான் மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள தபால் துறை கருவூலத்தில் இருந்து ரூ.1.20 கோடி கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம், பர்த்வான் மாவட்ட கோர்ட் வளாகத்தில் பல்வேறு துறைகளுக்கு சொந்தமான கருவூலங்கள் உள்ளன. அவ்வகையில், பர்த்வான் மாவட்ட தலைமை தபால் நிலையத்துக்கு சொந்தமான கருவூலமும் இங்கு உள்ளது. தபால் நிலையத்தின்  பணம் மற்றும் மாதந்தோறும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் தொகை போன்றவை இங்கே பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், பர்த்வான் மாவட்ட தலைமை தபால் நிலைய தலைமை கணக்காளர் ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்ப வேண்டிய பணத்தை சரிபார்ப்பதற்காக இன்று காலை கருவூலத்துக்கு வந்தார். அப்போது கருவூலத்தின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு திடுக்கிட்ட அவர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த துணிகர கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பர்த்வான் தலைமை தபால் நிலையத்தில் ஓய்வூதியம் பெறவந்த பலர் பணம் கிடைக்காமல் வெறுங்கையோடும், ஏமாற்றத்துடனும் திரும்பிச் சென்றனர்.
    Next Story
    ×