search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான்: தறிகெட்டு ஓடிய கார் மோதி பாத யாத்திரை சென்ற 7 பேர் பலி
    X

    ராஜஸ்தான்: தறிகெட்டு ஓடிய கார் மோதி பாத யாத்திரை சென்ற 7 பேர் பலி

    ராஜஸ்தான் மாநிலம் தாவுல்பூர் அருகே இன்று காலை பயங்கர வேகமாக தற்கெட்டு ஓடிய கார் மோதி கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் தாவுல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு அங்குள்ள பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இன்று அதிகாலை காரா ஆற்றின் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த போது எதிரே பயங்கர வேகமாக வந்த காரானது யாத்ரீகர்கள் மீது திடீரென மோதியது.

    இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமானோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு மேலும் மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×