என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானுக்கு இந்திய படைகளை அனுப்பும் எண்ணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்26 Sep 2017 10:04 AM GMT (Updated: 26 Sep 2017 10:04 AM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு இந்திய படைகளை அனுப்பும் எண்ணம் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் உடனான சந்திப்பிற்கு பின்னர் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை இந்திய உயரதிகாரிகள் வரவேற்றனர். இதனையடுத்து, நார்த் ப்ளாக்கில் மேட்டீஸை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
முன்னதாக டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் வீரமரணம் அடைந்த முன்னாள் வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பலமாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிகாக அனைத்து உதவிகளும் இந்தியா மேற்கொள்ளும். இருப்பினும், இந்திய படைகளை அங்கு அனுப்பும் எண்ணம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் அமெரிக்காவின் உற்ற நட்பு நாடாக இந்தியா உள்ளதாகவும், தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் இந்தியா ஆதரவு அளித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை இந்திய உயரதிகாரிகள் வரவேற்றனர். இதனையடுத்து, நார்த் ப்ளாக்கில் மேட்டீஸை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
முன்னதாக டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் வீரமரணம் அடைந்த முன்னாள் வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பலமாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிகாக அனைத்து உதவிகளும் இந்தியா மேற்கொள்ளும். இருப்பினும், இந்திய படைகளை அங்கு அனுப்பும் எண்ணம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் அமெரிக்காவின் உற்ற நட்பு நாடாக இந்தியா உள்ளதாகவும், தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் இந்தியா ஆதரவு அளித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X