search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி: மதுரா அருகே கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
    X

    உ.பி: மதுரா அருகே கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

    உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே இன்று அதிகாலை கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டம் அருகே உள்ள மஹாவன் பகுதியில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. சாலையின் வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக காரானது தலைகீழாக கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×