என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே வேளையில் 250 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின: உத்தரகாண்டில் பயங்கர விபத்து
Byமாலை மலர்25 Sep 2017 1:02 PM GMT (Updated: 25 Sep 2017 1:02 PM GMT)
உத்தரகாண்ட் மாநிலத்தில் லாரியில் தீபற்றியதால் ஒரே வேளையில் 250 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்ட்வானி - அல்மோரா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு பழங்கால பாலத்தின் மீது சென்ற சரக்கு லாரியில் இன்று திடீரென தீபிடித்தது. மளமளவென்று பரவிய தீயினால் பின்பக்கத்தில் இருந்த 250 சமையல் எரிவாய் சிலிண்டரகள் அடுத்தடுத்து வரிசையாக வெடித்து சிதறின.
விபத்துக்குள்ளான லாரிக்கு அருகாமையில் எந்த வாகனமும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் சிலிண்டர்கள் வெடித்த சப்தம் சுற்றுப்பட்டில் இருந்த பல கிராமங்களில் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது. லாரியின் ஒயரிங் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்ட்வானி - அல்மோரா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு பழங்கால பாலத்தின் மீது சென்ற சரக்கு லாரியில் இன்று திடீரென தீபிடித்தது. மளமளவென்று பரவிய தீயினால் பின்பக்கத்தில் இருந்த 250 சமையல் எரிவாய் சிலிண்டரகள் அடுத்தடுத்து வரிசையாக வெடித்து சிதறின.
விபத்துக்குள்ளான லாரிக்கு அருகாமையில் எந்த வாகனமும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் சிலிண்டர்கள் வெடித்த சப்தம் சுற்றுப்பட்டில் இருந்த பல கிராமங்களில் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது. லாரியின் ஒயரிங் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X