என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலிக்க மறுத்ததால் பெண் உயிருடன் எரித்துக் கொலை
Byமாலை மலர்25 Sep 2017 11:31 AM GMT (Updated: 25 Sep 2017 11:31 AM GMT)
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தன்னிடம் பேச மறுத்த பெண்ணை தந்தையுடன் இணைந்து வாலிபர் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள இசார்வால் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்ற வாலிபர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பேச முயன்றுள்ளார். ஒரு நாள் அதே போல் பெண்ணிடம் பேச முயன்ற போது கோபத்தில் அந்த பெண் வாலிபரை அடித்ததாக கூறப்படுகிறது. இது வாலிபருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அந்த பெண் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ரவி மற்றும் அவரது தந்தை, அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரது உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் அந்த பெண் படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த பெண் இறப்பதற்கு முன் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், ரவி தன் மீது மண் எண்ணெய் ஊற்றியதாக கூறினார். ஆனால் தீப்பற்ற வைத்தது யார் என்பது குறித்து தெரியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் ரவி மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள இசார்வால் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்ற வாலிபர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பேச முயன்றுள்ளார். ஒரு நாள் அதே போல் பெண்ணிடம் பேச முயன்ற போது கோபத்தில் அந்த பெண் வாலிபரை அடித்ததாக கூறப்படுகிறது. இது வாலிபருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அந்த பெண் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ரவி மற்றும் அவரது தந்தை, அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரது உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் அந்த பெண் படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த பெண் இறப்பதற்கு முன் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், ரவி தன் மீது மண் எண்ணெய் ஊற்றியதாக கூறினார். ஆனால் தீப்பற்ற வைத்தது யார் என்பது குறித்து தெரியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் ரவி மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X