என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்கண்ட்: பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து - 8 பேர் பலி
Byமாலை மலர்25 Sep 2017 3:18 AM GMT (Updated: 25 Sep 2017 3:18 AM GMT)
ஜார்கண்ட மாநிலம் குமார்துபியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலம் குமார்துபி பகுதியில் தனியார் பட்டாசு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகின்றது. இன்று காலை ஆலையின் வெடிமருத்து சேமிப்பு கிடங்கு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீயானது வேகமாக மற்ற பகுதிகளுக்கும் நொடிப்பொழுதில் பரவியது.
பட்டாசுகள் இருக்கும் பகுதியிலும் தீ பரவியதால் அப்பகுதியில் பெரும் சப்தத்துடன் வெடி குண்டுகள் வெடிப்பது போல இருந்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
கட்டுகடங்காமல் எரிந்த தீயை கடின முயற்சி எடுத்து தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். இந்த விபத்தில் ஆலையில் இருந்த 8 பேர் உடல் கருகி பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள்
வெளியாகியுள்ளன.
தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்பட்டால் மட்டுமே பலி எண்ணிக்கை மற்றும் சேத விபரங்கள் துல்லியமாக தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் குமார்துபி பகுதியில் தனியார் பட்டாசு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகின்றது. இன்று காலை ஆலையின் வெடிமருத்து சேமிப்பு கிடங்கு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீயானது வேகமாக மற்ற பகுதிகளுக்கும் நொடிப்பொழுதில் பரவியது.
பட்டாசுகள் இருக்கும் பகுதியிலும் தீ பரவியதால் அப்பகுதியில் பெரும் சப்தத்துடன் வெடி குண்டுகள் வெடிப்பது போல இருந்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
கட்டுகடங்காமல் எரிந்த தீயை கடின முயற்சி எடுத்து தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். இந்த விபத்தில் ஆலையில் இருந்த 8 பேர் உடல் கருகி பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள்
வெளியாகியுள்ளன.
தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்பட்டால் மட்டுமே பலி எண்ணிக்கை மற்றும் சேத விபரங்கள் துல்லியமாக தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X