என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசார யாத்திரை இன்று தொடங்குகிறார்
Byமாலை மலர்24 Sep 2017 9:55 PM GMT (Updated: 24 Sep 2017 9:55 PM GMT)
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இன்று தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இன்று தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாரதீய ஜனதா செல்வாக்கு பெற்று விளங்குகிறது. அங்கு தற்போது விஜய் ரூபானி முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் கடுமையாக பாடுபட்டு ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த வேலைகளை அந்த கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்த மாத தொடக்கத்தில் குஜராத் சென்று காங்கிரசின் வெற்றி வாய்ப்பு குறித்து ஆய்வு செய்ததோடு, தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். குஜராத்தில் இன்று (திங்கட் கிழமை) அவர் தனது தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார். அங்குள்ள துவாரகா, ஜாம்நகர் மாவட்டங்களில் பல்வேறு தரப்பு மக்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோவிலுக்கு இன்று காலை செல்லும் அவர் பின்னர் பாட்டியா கிராமத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பிறகு கஞ்ச்தாபர் என்ற கிராமத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், பின்னர் வாத்ரா கிராமத்தில் பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். கம்பாலியா என்ற இடத்தில் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள வாசை என்ற கிராமத்தில் மீனவர்களை சந்தித்து பேசும் ராகுல் காந்தி, அதன்பிறகு சண்டி பஜார் என்ற இடத்தில் நடைபெறும் வர்த்தகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
ராகுல் காந்தியின் பிரசார பயணத்துக்கான ஏற்பாடுகளை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இன்று தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாரதீய ஜனதா செல்வாக்கு பெற்று விளங்குகிறது. அங்கு தற்போது விஜய் ரூபானி முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் கடுமையாக பாடுபட்டு ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த வேலைகளை அந்த கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்த மாத தொடக்கத்தில் குஜராத் சென்று காங்கிரசின் வெற்றி வாய்ப்பு குறித்து ஆய்வு செய்ததோடு, தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். குஜராத்தில் இன்று (திங்கட் கிழமை) அவர் தனது தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார். அங்குள்ள துவாரகா, ஜாம்நகர் மாவட்டங்களில் பல்வேறு தரப்பு மக்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோவிலுக்கு இன்று காலை செல்லும் அவர் பின்னர் பாட்டியா கிராமத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பிறகு கஞ்ச்தாபர் என்ற கிராமத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், பின்னர் வாத்ரா கிராமத்தில் பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். கம்பாலியா என்ற இடத்தில் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள வாசை என்ற கிராமத்தில் மீனவர்களை சந்தித்து பேசும் ராகுல் காந்தி, அதன்பிறகு சண்டி பஜார் என்ற இடத்தில் நடைபெறும் வர்த்தகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
ராகுல் காந்தியின் பிரசார பயணத்துக்கான ஏற்பாடுகளை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X