என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனது மகனுக்கு பல கணக்குகள் இருப்பதாக கூறுவது பொய்: சி.பி.ஐ. புகாருக்கு ப.சிதம்பரம் மறுப்பு
Byமாலை மலர்24 Sep 2017 7:29 AM GMT (Updated: 24 Sep 2017 7:29 AM GMT)
எனது மகனுக்கு வெளிநாட்டு வங்கியில் பல கணக்குகள் இருப்பதாக சி.பி.ஐ கூறும் பொய் உண்மையாகி விடாது என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவருக்கு ஒரு வெளிநாட்டு வங்கியில் பல கணக்குகள் இருப்பதாகவும், அவற்றின் மூலம் பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வருவதாகவும், கடந்த முறை இங்கிலாந்து சென்ற போது அந்த வங்கி கணக்குகளை மூட முயற்சி செய்ததாகவும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்து இருந்தது.
இதற்கு மத்திய மந்திரி ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சி.பி.ஐ. கூறும் பொய் உண்மையாகி விடாது. எனது மகனுக்கு (கார்த்தி சிதம்பரத்துக்கு) வெளிநாட்டு வங்கியில் பல கணக்குகள் எதுவும் கிடையாது. எனது குடும்பத்திற்கோ, எனக்கோ வெளிநாடுகளில் கணக்கில் வராத சொத்து இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்.
சி.பி.ஐ. கூறுவது போல் வெளிநாட்டில் எனது குடும்பத்திற்கு சொத்து இருந்தால் அவற்றை அரசுக்கு எழுதிக் கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளேன். இது போன்ற செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவருக்கு ஒரு வெளிநாட்டு வங்கியில் பல கணக்குகள் இருப்பதாகவும், அவற்றின் மூலம் பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வருவதாகவும், கடந்த முறை இங்கிலாந்து சென்ற போது அந்த வங்கி கணக்குகளை மூட முயற்சி செய்ததாகவும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்து இருந்தது.
இதற்கு மத்திய மந்திரி ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சி.பி.ஐ. கூறும் பொய் உண்மையாகி விடாது. எனது மகனுக்கு (கார்த்தி சிதம்பரத்துக்கு) வெளிநாட்டு வங்கியில் பல கணக்குகள் எதுவும் கிடையாது. எனது குடும்பத்திற்கோ, எனக்கோ வெளிநாடுகளில் கணக்கில் வராத சொத்து இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்.
சி.பி.ஐ. கூறுவது போல் வெளிநாட்டில் எனது குடும்பத்திற்கு சொத்து இருந்தால் அவற்றை அரசுக்கு எழுதிக் கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளேன். இது போன்ற செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X