என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங். அரசின் திட்டங்களை ஐ.நா.வில் அங்கீகரித்த சுஷ்மாவுக்கு நன்றி: ராகுல் காந்தி
Byமாலை மலர்24 Sep 2017 6:33 AM GMT (Updated: 24 Sep 2017 6:33 AM GMT)
ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்.களை உருவாக்கியுள்ளோம் என ஐ.நா.சபையில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ்க்கு, காங்கிரஸ் அரசின் திட்டங்களை அங்கீகரித்ததற்கு நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச்சபையின் 72-வது மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூட்டத்தில் பேசினார்.
தனது பேச்சில் பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய அவர், “70 ஆண்டுகளில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்.களை கொண்டு வந்து அதன் மூலம் சிறந்த பொறியாளர்கள், டாக்டர்களை உருவாக்கியுள்ளோம். நீங்கள் தீவிரவாதிகளை உருவாக்கியுள்ளீர்கள்” என்று பேசினார்.
மேலும், லஷ்கர் இ தாய்பா, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களை தான் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சுஷ்மாவின் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்.களை உருவாக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் பார்வையை அங்கீகாரம் செய்ததற்கு சுஷ்மா ஸ்வராஜ்க்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என பா.ஜ.க தலைவர்கள் கூறிவந்த நிலையில், காங்கிரஸ் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லாமல் அவர்களால் இந்தியாவை பெருமைப்படுத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப துறை பிரிவு தலைவர் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச்சபையின் 72-வது மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூட்டத்தில் பேசினார்.
தனது பேச்சில் பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய அவர், “70 ஆண்டுகளில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்.களை கொண்டு வந்து அதன் மூலம் சிறந்த பொறியாளர்கள், டாக்டர்களை உருவாக்கியுள்ளோம். நீங்கள் தீவிரவாதிகளை உருவாக்கியுள்ளீர்கள்” என்று பேசினார்.
மேலும், லஷ்கர் இ தாய்பா, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களை தான் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சுஷ்மாவின் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்.களை உருவாக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் பார்வையை அங்கீகாரம் செய்ததற்கு சுஷ்மா ஸ்வராஜ்க்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என பா.ஜ.க தலைவர்கள் கூறிவந்த நிலையில், காங்கிரஸ் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லாமல் அவர்களால் இந்தியாவை பெருமைப்படுத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப துறை பிரிவு தலைவர் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X