என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மீண்டும் குடகு விடுதிக்கு திரும்பினார்
Byமாலை மலர்24 Sep 2017 6:05 AM GMT (Updated: 24 Sep 2017 6:05 AM GMT)
முன்ஜாமீன் மனு விசாரணைக்காக சென்னை சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மீண்டும் குடகு விடுதிக்கு திரும்பினார்.
பெங்களூரு:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மட்டும் வேறு இடத்தில் தங்கி இருக்கிறார். வெற்றிவேல் சென்னையில் உள்ளார்.
இதேபோல முன்ஜாமீன் மனு விசாரணைக்காக சென்னை சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மீண்டும் குடகு விடுதிக்கு திரும்பி விட்டார். மேலும் குடகு விடுதியில் தங்கி இருந்த பூந்தமல்லி ஏழுமலை தனது மாமனார் காரியத்திற்காக குடகு விடுதியில் இருந்து நேற்று முன்தினம் பூந்தமல்லி புறப்பட்டு சென்றார். நேற்று அவர் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
இதேபோல வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான ஜெயந்தி பத்மநாபன் தனது 2 குழந்தைகளை கவனிப்பதற்காக குடியாத்தம் சென்றுள்ளார். மற்றவர்கள் தொடர்ந்து குடகு விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.
அவர்களை சந்திக்க சென்ற தினகரன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசினார். எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் நேரத்தில் ஊருக்கு சென்று வரலாம் என்றும் அறிவுரை கூறினார். வழக்கு முடியும் 4-ந்தேதி வரை விடுதியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதை அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அக்டோபர் 4-ந்தேதி வரை விடுதியில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர். தினகரன் விடுதியில் இருந்து இன்று தமிழகத்துக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மட்டும் வேறு இடத்தில் தங்கி இருக்கிறார். வெற்றிவேல் சென்னையில் உள்ளார்.
இதேபோல முன்ஜாமீன் மனு விசாரணைக்காக சென்னை சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மீண்டும் குடகு விடுதிக்கு திரும்பி விட்டார். மேலும் குடகு விடுதியில் தங்கி இருந்த பூந்தமல்லி ஏழுமலை தனது மாமனார் காரியத்திற்காக குடகு விடுதியில் இருந்து நேற்று முன்தினம் பூந்தமல்லி புறப்பட்டு சென்றார். நேற்று அவர் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
இதேபோல வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான ஜெயந்தி பத்மநாபன் தனது 2 குழந்தைகளை கவனிப்பதற்காக குடியாத்தம் சென்றுள்ளார். மற்றவர்கள் தொடர்ந்து குடகு விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.
அவர்களை சந்திக்க சென்ற தினகரன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசினார். எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் நேரத்தில் ஊருக்கு சென்று வரலாம் என்றும் அறிவுரை கூறினார். வழக்கு முடியும் 4-ந்தேதி வரை விடுதியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதை அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அக்டோபர் 4-ந்தேதி வரை விடுதியில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர். தினகரன் விடுதியில் இருந்து இன்று தமிழகத்துக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X