என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்
Byமாலை மலர்23 Sep 2017 10:49 PM GMT (Updated: 23 Sep 2017 10:49 PM GMT)
சட்டசபை தேர்தல் பணிகளுக்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, நாளை முதல் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அமகதாபாத்:
சட்டசபை தேர்தல் பணிகளுக்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, நாளை முதல் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேலைகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.
இதற்கிடையே, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், குஜராத் சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்க ராகுல் காந்தி நாளை இங்கு வரவுள்ளார். அங்குள்ள துவாராகாவில் உள்ள துவாரகாதிஷ் கோயிலில் தனது பணிகளை தொடங்குகிறார். மேலும், பாடியா கிராமத்தில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை அவர் சந்திக்கிறார்.
துவாரகா மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் ராகுல் கலந்துரையாடுகிறார். துவாரகா மற்றும் ஜாம்நகரில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் பணிகளுக்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, நாளை முதல் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேலைகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.
இதற்கிடையே, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், குஜராத் சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்க ராகுல் காந்தி நாளை இங்கு வரவுள்ளார். அங்குள்ள துவாராகாவில் உள்ள துவாரகாதிஷ் கோயிலில் தனது பணிகளை தொடங்குகிறார். மேலும், பாடியா கிராமத்தில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை அவர் சந்திக்கிறார்.
துவாரகா மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் ராகுல் கலந்துரையாடுகிறார். துவாரகா மற்றும் ஜாம்நகரில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X