என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.நா.வில் சுஷ்மா சுவராஜ் உரை: பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு
Byமாலை மலர்23 Sep 2017 8:11 PM GMT (Updated: 23 Sep 2017 8:11 PM GMT)
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியா அறிஞர்களையும், டாக்டர்களையும், உருவாக்குகிறது. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. இன்றைய 21-ம் நூற்றாண்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா.சபை மாற்றியமைக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐ.நாவில் சுஷ்மா சுவராஜின் பேச்சுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் குறித்து தனது கருத்தை சுஷ்மா ஜி வலிமையாக பதிவு செய்துள்ளார். அவரது உரையால் இந்தியா உலக அரங்கில் பெருமை பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் சுஷ்மா சுவராஜ் பேச்சுக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலையை வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியா அறிஞர்களையும், டாக்டர்களையும், உருவாக்குகிறது. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. இன்றைய 21-ம் நூற்றாண்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா.சபை மாற்றியமைக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐ.நாவில் சுஷ்மா சுவராஜின் பேச்சுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் குறித்து தனது கருத்தை சுஷ்மா ஜி வலிமையாக பதிவு செய்துள்ளார். அவரது உரையால் இந்தியா உலக அரங்கில் பெருமை பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் சுஷ்மா சுவராஜ் பேச்சுக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலையை வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X